வராகா நதிக்கரையோரம் - அழகுராஜ்
கடும் நிசியைப் போல தான் அந்தப் பொழுது இருந்தது. ஆனால் மணி என்னவோ 8:15 தான். அந்த நேரத்தில் ஏற்கனவே, வந்து போன பழக்கம் இருந்தும் அன்று ஏதோ ஒன்று புதிதாக இருந்தது. திருவிழா கோலத்தின் ஒளியின் அம்சம் அன்றைய இரவில் கைகூடி இருந்திருப்பதை உணர்ந்ததும் கூடுதல் காரணமாக இருக்கலாம். இவை எல்லாம் இப்படி இருக்க எண்ணத்திற்கு வலு சேர்க்கும் பெரும் அம்சமாக கல்லூரி பெண்களின் ஒப்பனையான முகமும் வாலிப்புடைய நடையும் வந்து சேர்ந்ததை எப்படிச் சொல்வது. கூட்டம் கூட்டமாக பெண்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் எத்தனையோ பையன்கள் ஜியோ சினிமாவில் ஐ.பி.எல். பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது எதையும் அறியாமல் அவர்கள் அங்கே நின்று சிரிக்கவே செய்தனர். அந்த நேரத்தில் அவனது வருகையும் குறிப்பிடப்பட்ட இடம் நோக்கிச் சென்றது. ஐ.பி.எல் ரசிகர்களில் அவனும் ஒருவன் தானே. அவன் மட்டும் ஸ்கோர் என்ன என்று தெரியாமல் இருந்து விடுவானா? இவன் கூகுளில் ஸ்கோர் பார்த்துவிட்டு பயங்கரமான கம்பாக் என போட்டியில் முடிவு எப்படியாகும் என்று எந்த வியூகமும் இன்றி பூவரசனுக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருந்தான். போன் போட்டு